டெல்லி: தமிழகத்தில் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டு பி.எட் பட்டப்படிப்புக்கு யுஜிசி அனுமதி அளித்துள்ளது.

இந்த தகவலை திறந்த நிலை பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. பல்கலைக்கழகத்தில் இரண்டாண்டு பி.எட் பட்டப்படிப்புக்கு அனுமதி வழங்கி பல்கலைக்கழக நிர்வாக குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் நடைபெறும். மே மாதம் முதல் வகுப்புகள் தொடங்கும் என்றும் யுஜிசி அறிவித்து உள்ளது.