ஜம்மு:

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ஹந்த்வாராவில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

முன்னதாக, ஹந்த்வாராவில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து பாதுகாப்பு படைவீரர்கள், அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிலும் துப்பாக்கிச்சண்டை நடந்தது.

முடிவில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பயங்கவாதிகள் தாக்குதலில் ஒரு பாதுகாப்பு படை வீரர் காயமடைந்தார்.