ஸ்ரீநகர்:

ம்மு காஷ்மீர் அனந்தநாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் 2 பேர் பாதுகாப்பு படையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.

சமீப காலமாக ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள சிஸ்தர்கம் கிராம பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து, ராணுவத்தினர்,  மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் சிறப்பு செயல்பாடுகள் குழு (SOG) ஆகியோர் பயங்கரவாதிகள் தங்கி இருந்த பகுதியை சுற்றி வளைத்தனர்.

இதையடுத்து, அங்கிருந்து தப்பிக்கும் முயற்சியில், பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினார். இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நீடித்தது. இதில்,  2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அவர்களிடம் இருந்து ஏராளமான  ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கைப்பற்றினர்.

இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ள னர்.

இதேபோல் குப்வாரா மாவட்டத்தின் ஹல்மத்போரா கிராமத்தில் நேற்று நடந்த சண்டையில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.