பைசாபாத்

ஆப்கானிஸ்தானில் அரை மணி நேரத்துக்குள் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது மக்களைப் பீதியில் ஆழ்த்தி உள்ளது,

 

நில அதிர்வுக்கான தேசிய மையம் ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் இன்று நள்ளிரவு இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளது.  இதில் முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4. ஆகப் பதிவானது.

இந்த முதல் நில நடுக்கம் நள்ளிரவு 12.28 மணியளவில் 80 கி.மீ. ஆழத்தில், பைசாபாத்தில் இருந்து 126 கி.மீ. கிழக்கு தொலைவில் ஏற்பட்டது,

இரண்டாவது நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவானது. இது நள்ளிரவு 12.55 மணிக்கு 100 கி.மீ. ஆழத்தில் பைசாபாத்தின் 100 கி.மீ தென் கிழக்கில் நிகழ்ந்தது.

அரைமணி நேரத்திற்குள் அடுத்தடுத்து  ஏற்பட்ட இந்த இரண்டு நிலநடுக்கங்களால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உறுதியான தகவல் எதுவும்  இதுவரை வெளியாகவில்லை.