சென்னை: மாநகராட்சி பகுதிகளில் உள்ள  கடைகளில் 2 குப்பை பெட்டி வைக்க வேண்டும், இல்லையேல் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ள சென்னை மாநகராட்சி, பேருந்து நிறுத்தங்களிலும் குப்பை தொட்டி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை மாநகரரில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டி, அசுத்தம் செய்யப்படும் நடவடிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மாநகராட்சி பல நடவடிக்கைகளை வருகிறது. வீடுகளில், குப்பைகளை பிரித்து கொடுக்கும்படியும் அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில், சென்னையில் உள்ள பேருந்து  நிறுத்தங்களில் வைப்பதற்காக 442 சிறிய குப்பை சேகரிப்பு பெட்டிகளை மாநகராட்சி வாங்கி உள்ளது. அதில் குப்பைகளை போல பேருந்து பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இநத் நிலையில், சென்னையில் கடைகளில் 2 குப்பை பெட்டி வைக்கா விட்டால் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,  சென்னை மாநகராட்சி பகுதியில் 94 ஆயிரத்து 523 கடைகள்  உள்ளது.. இந்த கடைகள் அனைத்திலும், இரண்டு இரண்டு குப்பை பெட்டிகள் வாடிக்கையாளர்கள் பார்வையில் தெரியும்படி வைத்திருக்க வேண்டும். அதில் மக்கும் குப்பை போட வேண்டிய பெட்டி, மகத்தாத குப்பை போட வேண்டிய பெட்டி என்பதை தெளிவாக எழுதி வைக்க வேண்டும். தவறும் கடைகளுக்கு ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மேயர் பிரியா எச்சரித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும்.  சென்னையில் உள்ள பேருந்து  நிறுத்தங்களில் வைப்பதற்காக 442 சிறிய குப்பை சேகரிப்பு பெட்டிகளை மாநகராட்சி வாங்கி உள்ளது. அதில் குப்பைகளை போல பேருந்து பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இந்த குப்பை தொட்டிகள் வைக்கும் நடைமுறை, முதற்கட்டமாக 18 சாலைகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. திருவொற்றியூர் நெடுஞ்சாலை, அம்பத்தூர்-செங்குன்றம் ரோடு, பூந்தமல்லி நெடுஞ்சாலை, எலியட்ஸ் கடற்கரை சாலை, ராஜீவ்காந்தி சாலை, தியாகராய சாலை உள்ளிட்ட சாலைகள் இதில் அடங்கும். இந்த சாலைகளில் 196 பஸ் நிறுத்தங்கள் உள்ளன

. பொது இடங்களில் குப்பைகளை கொட்டி நகரின் அழகை கெடுப்பதை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கையை மாநகராட்சி எடுத்துள்ளது. பஸ் நிறுத்தங்களில் வைப்பதற்காக 442 சிறிய குப்பை சேகரிப்பு பெட்டிகளை மாநகராட்சி வாங்கி உள்ளது.  இந்த பகுதிகளை கண்காணித்து உடனடி நடவடிக்கை எடுக்க கூடுதலான ஊழியர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர் என அதில் கூறப்பட்டுள்ளது.