சென்னை:  தமிழகத்தில் நேற்று புதிதாக மேலும் 1,192 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆன நிலையில், சென்னையில் மட்டும் 150 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி,   இதுவரை 26,88,284 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 35,912 பேர் உயிர் இழந்துள்ளனர்.  26,37,802  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும்  14,570 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா பாதிப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது.  சென்னையில் நேற்று 150 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,52,920 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒருவர் மட்டுமே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில்,  இதுவரை 8,527 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 166 பேர் குணம் அடைந்து வீடு திரும்பிய நிலையில், இதுவரை  மொத்தம் 5,42,619 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 1,774 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு – விவரம்: