டெல்லி: இந்தியாவில்  கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. கடந்த  24மணி நேரத்தில் 4,858 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 2.76 சதவிகிதமாக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. அதனபடி, நாடு முழுவதும்,  4,858 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தொற்று பாதிப்பு 5ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளது. நேற்று 5 ஆயிரத்து 664 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 4 ஆயிரத்து 858 ஆக குறைந்துள்ளது.  .இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,45,34,188 லிருந்து 4,45,39,046 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 4,735 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,39,57,929 லிருந்து 4,39,62,664 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று  ஒரே நாளில் சிகிச்சை பலன்ன்றி 18 பேர் பலியாகினர். இதுவரை 5,28,355 பேர் உயிரிழந்தனர்.

நாடு முழுவதும் தற்போது, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 47,922 லிருந்து 48,027 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை நாடு முழுவதும் 216 கோடியே 70 லட்சம் ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்தியாவில் ஒரே நாளில் 13,59,361 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.