டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 2,364 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாட்டில் கொரோனா வால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து  தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி நேற்று ஒரே நாளில் புதிதாக மேலும் 2,364 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,29,563ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24மணி நேரத்தில் மேலும் 10 பேர் சிகிச்சை பலனின்றி  இறந்துள்ளனர்.இதன் மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் மொத்த  எண்ணிக்கை 5,24,303 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.22% ஆக குறைந்துள்ளது.

நேற்று  ஒரே நாளில் 2,582 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,25,89,841ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.75% ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில், நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக 15,419 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.04% ஆக குறைந்துள்ளது.

தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் இதுவரை   1,91,79,96,905 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 13,71,603 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.