தமிழகத்தில் ப கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 16,64,350 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 6,016 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 4,50,267 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் நேற்று  364 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18,369 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து நேற்று  21,362 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 14,03,052 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில்நேற்று  ஒரே நாளில் 1,60,463 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.  தற்போது 2,42,929 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் சென்னையை அடுத்து,  கோயம்புத்தூரில் 3,264 பேருக்கும், செங்கல்பட்டில் 2,154 பேருக்கும், திருவள்ளுரில் 1,829 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,241 பேருக்கும், கன்னியாகுமரியில் 1,069 பேருக்கும், திருச்சியில் 1,544 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு: