டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக  2,075 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. 71 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்தியாவில்  கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.‘

மத்திய சுகாதாரத்துணை இன்று இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அன்படி கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 2,075 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,06,080-ஆக உயர்ந்துள்ளது.

நேற்று சிகிச்சை பலனின்றி மேலும் 71 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 516352-ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.20% ஆக குறைந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் கொரோனாவில் இருந்து  3383-பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம்  குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 42461926-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.73% ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 27802 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.07% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் 1,81,04,96,924 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 5,84,177 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.