சென்னை:  தமிழகம் முழுவதும் கடந்த 24மணி நேரத்தில்  ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் வெளி யிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று மேலும் 613 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று இரவு 8 மணி அளவில் வெளியிட்டுள்ள தகவலின்படி, மாநிலம் முழுவதும் இன்று 1,01,070 கொரோனா சோதனைகள் செய்யப்பட்டு உள்ளது.  இதுவரை 5,61,13,455 சோதனைகள் செய்யப்பட்டு உள்ளது.

இன்று மாநிலம் முழுவதும் புதிதாக மேலும் 613  பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 27,39,196 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 125 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி 9 பேர் பலியான நிலையில், இதுவரை கொரோனா வால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36,676  ஆக அதிகரித்துள்ளது.

அதே வேளையில் இன்று மேலும் 665 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளதால், குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26,95,174 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பில்  சென்னை  முதலிடத்தில் தொடர்கிறது. சென்னையில்  இன்று 125 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், கோவையில் 101 பேருக்கும், ஈரோட்டில் 46 பேருக்கும், செங்கல்பட்டில் 46 பேருக்கும் திருப்பூரில் 44 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு:

தலைநகர் சென்னையில் இன்று 125  பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 5,60,200 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 2 பேர் பலியாகி உள்ளனர். அதே வேளையில் இன்று மட்டும் 124 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது சென்னையில் மட்டும்  1336 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்புமாவட்டம் வாரியாக விவரம்:

அரியலூர் 1
செங்கல்பட்டு 46
சென்னை 125
கோவை 101
கடலூர் 7
தர்மபுரி 3
திண்டுக்கல் 5
ஈரோடு 46
கள்ளக்குறிச்சி 2
காஞ்சிபுரம் 11
கன்னியாகுமரி 11
கரூர் 10
கிருஷ்ணகிரி 11
மதுரை 5
மயிலாடுதுறை 3
நாகப்பட்டினம் 2
நாமக்கல் 39
நீலகிரி 14
பெரம்பலூர் 2
புதுக்கோட்டை 1
ராமநாதபுரம் 3
ராணிப்பேட்டை 1
சேலம் 36
சிவகங்கை 8
தென்காசி 2
தஞ்சாவூர் 16
தேனி 1
திருப்பத்தூர் 2
திருவள்ளூர் 17
திருவண்ணாமலை 6
திருவாரூர் 1
தூத்துக்குடி 3
திருநெல்வேலி 2
திருப்பூர் 44
திருச்சி 13
வேலூர் 10
விழுப்புரம் 3
விருதுநகர் 0