சென்னை: தமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், தற்போது 4,822 பேர் சிகிச்சை சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இருந்தாலும், மற்ற மாவட்டங்களை விட சென்னைதான் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. தற்போது தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 09 ஆயிரத்து 646 ஆக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 4,822 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,01,041 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி 3,783 பேர் பலியாகியுள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் :

கோடம்பாக்கம் – 262

அண்ணா நகர் – 359

தேனாம்பேட்டை – 141

தண்டையார்பேட்டை – 108

ராயபுரம் – 229

அடையாறு – 118

திரு.வி.க. நகர் – 197

வளசரவாக்கம் – 140

அம்பத்தூர் – 250

திருவொற்றியூர் – 108

மாதவரம் – 156

ஆலந்தூர் – 151

பெருங்குடி – 101

சோழிங்கநல்லூர் – 57

மணலி – 43