சென்னை: தமிழகத்தில் நேற்று கொரோனா வைரசால் புதிதாக 33,075 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 6,150  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

தமிழகத்தில் புதிதாக 33,075 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 16,31,291 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 6,150 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 4,44,371 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இன்று 335 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18,005 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 20,486 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 13,81,690 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,56,278 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

தற்போதைய நிலையில்,  2,31,596 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக  சென்னையில் 6,150 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 4,44,371 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில்  நேற்று  86 பேர் உயிர் இழந்துள்ளார்.. இதுவரை 5,851 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை  3,90,364 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 48,156 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.

சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு – மண்டலவாரி நிலைப்பட்டியல்…