சென்னை:  தமிழகத்தில் இன்றுமேலும் 782  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 116 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகம் முழுவதும் கடந்த 24மணி நேரத்தில்  ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை இன்று இரவு 7.30 மணி அளவில் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது.

மாநிலம் முழுவதும் இன்று 1,01,984  கொரோனா சோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. இதுவரை 5,29,52,443**சோதனைகள் செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும்  782 782 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 27,17,203 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி 13  பேர் பலியான நிலையில், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36,324 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மேலும்  907  பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26,71,668 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும் 9,349 பேர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று பாதிப்பில்  சென்னை மீண்டும் முதலிடத்தில் உள்ளது. சென்னையில் இன்று 116 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், கோவையில் 115 பேருக்கும், ஈரோட்டில் 72 பேருக்கும், செங்கல்பட்டில் 61 பேருக்கும் திருப்பூரில் 50  பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு:

தலைநகர் சென்னையில் இன்று 116  பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 5,56,649 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்புமாவட்டம் வாரியாக விவரம்:

அரியலூர் 1

செங்கல்பட்டு 61

சென்னை 116

கோவை 115

கடலூர் 10

தர்மபுரி 12

திண்டுக்கல் 9

ஈரோடு 72

கள்ளக்குறிச்சி 6

காஞ்சிபுரம் 21

கன்னியாகுமரி 12

கரூர் 15

கிருஷ்ணகிரி 6

மதுரை 13

மயிலாடுதுறை 2

நாகப்பட்டினம் 9

நாமக்கல் 36

நீலகிரி 18

பெரம்பலூர் 3

புதுக்கோட்டை 6

ராமநாதபுரம் 2

ராணிப்பேட்டை 5

சேலம் 41

சிவகங்கை 5

தென்காசி 0

தஞ்சாவூர் 23

தேனி 0

திருப்பத்தூர் 2

திருவள்ளூர் 20

திருவண்ணாமலை 10

திருவாரூர் 14

தூத்துக்குடி 6

திருநெல்வேலி 9

திருப்பூர் 50

திருச்சி 33

வேலூர் 11

விழுப்புரம் 3

விருதுநகர் 5