டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 1569 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 19 பேர் பலியாகி உள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேரத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, நேற்று ஒரே நாளில், புதிதாக மேலும்,   1,569 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,25,370 ஆக உயர்ந்ததுள்ளது.

நேற்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி மேலும் 19 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,260 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.22% ஆக குறைந்துள்ளது.

நேற்று ஒரேநாளில், .2,467 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,25,84,710 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.75% ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும்  16,400 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. * சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.04% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 10,78,005 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,91,48,94,858 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.