சியாபாஸ்

மெக்சிகோ நாட்டில் கடத்தப்பட்ட 16 காவல்துறையினர் மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த 4 நாட்களுக்கு  முன்பு மெக்சிகோவின் சியாபாஸ் மாகாணம் ஓகோசோகோல்டா பகுதியில் இருந்து டக்ஸ்ட்லா குட்ரெஸ் நகருக்கு ஒரு வாகனத்தில் காவல்துறையினர் சென்றனர். ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் சிலர் அந்த வாகனத்தை வழி மறித்தனர்.

பிறகு துப்பாக்கி முனையில் வாகனத்தில் இருந்த 16 காவல்துறையினரைச் சிறை பிடித்துச் சென்றனர். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  கடத்தப்பட்ட காவல்துறையினரை மீட்கும் பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

இப்பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் சியாபாசின் நெடுஞ்சாலை அருகே 16 காவலர்களும் இருப்பது தெரிய வந்து அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.