டிஸ் அபாபா, எதியோப்பியா

தியோப்பியாவில் இருந்து நைரோபி சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி 157 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

எதியோப்பிய நாட்டு தலைநக்ர் அடிஸ் அபாபாவில் இருந்து போயிங் 737 ரக விமானம் ஒன்று எதியோப்பிய நேரப்படி காலை 8.38 மணிக்கு கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியை நோக்கி கிளம்பியது. விமானம் புறப்பட்ட ஆறாம் நிமிடம் விமான கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்துள்ளது.

அப்போது பிஷாப்டு என்னும் நகரின் மீது அந்த விமானம் பறந்துக் கொண்டு இருந்துள்ளது. இந்த விமானம் அதே நேரம் விமானத்துக்குள்ளாகி விமானத்தில் பயனம் செய்துள்ள அனைவரும் மரணம் அடைந்துள்ளதாக எதியோப்பிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

இந்த விமானத்தில் 149 பயணிகளும் 8 பேர் கொண்ட விமானக் குழுவும் பயணம் செய்துள்ளனர்.  இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் 33 நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இந்த விபத்துக்கு எதியோப்பிய பிரதமர் தனது இரங்கலை டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.