டெல்லி:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,543 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. இதன் காரணமாக பாதிக்கப்பட்டோர்எண்ணிக்கை 30ஆயிரத்தை நெருங்குகிகறது. மீட்பு வீதத்தை 23.3% என்று மத்தியஅரசு தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இன்று காலை நிலவரப்படி நாட்டில் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 29,435 ஆக உயர்ந்துள்ளது. மொத்த வழக்குகளில், 21,632 செயலில் உள்ள வழக்குகள், 6,868 பேர் குணமடைந்துள்ளனர், மேலும் 934 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு வீதம் 23.3% ஆக உள்ளது‘
கடந்த 24 மணி நேரத்தில் 684 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்; எங்கள் மீட்பு விகிதம் இப்போது 23.3% ஆகும். இது மீட்பு விகிதத்தில் முற்போக்கான அதிகரிப்பு என்று மத்திய சுகாதார அமைச்சக இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்து உள்ளர்.
இந்தியாவிலேயே மிக மோசமான பாதிப்புக்குள்ளான மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது, மொத்த வழக்குகள் 8,590 ஆக உயர்ந்துள்ளன.
அதைத்தொடர்ந்து, குஜராத்தில் 3,548 வழக்குகளும், தலைநகர் டெல்லியில், 3,108 வழக்குகள் பதிவாகியுள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதைய நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை பரிசோதனை செய்யப்படுகிறது, இருப்பினும் இது ஒரு சிகிச்சையாக பயன்படுத்தப்படலாம் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், கடந்த 7 நாட்களில் இருந்து 80 மாவட்டங்களில் புதிய கொரோனா வழக்கு எதுவும் பதிவாகவில்லை என்று தெரிவித்து உள்ளார்.
மேலும் டெல்லியில் 4.11% சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு கொரோனாதொற்று உறுதியாகி உள்ளதாகவும், அவர்களில், 33 மருத்துவர்கள், 13 துணை மருத்துவர்களும்,
26 செவிலியர்கள், 24 களப்பணியாளர்கள், 24 சுகாதார ஊழியர்கள் உள்பட 120 பேர் என்றும் தெரிவித்து உள்ளார்.
[youtube-feed feed=1]