சென்னை

டி மின்னலுடன் பெய்த பலத்த மழையால் சென்னையில் 15 விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

நேற்று மாலை சுமார் 3 மணி அளவில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் திடீரென பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்தது. மழையால் சென்னை விமான நிலையத்தில் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன.  அப்போது கர்னூல், கோவை, டெல்லி, கொச்சி, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களிலிருந்து 5 விமானங்கள், சென்னை விமான நிலையத்துக்கு வந்தன.

பலத்த காற்றுடன் மழை பெய்ததால் அந்த விமானங்கள் தரை இறங்க முடியாமல் வானில் வட்டமடித்துப் பறந்து தத்தளித்துக் கொண்டு இருந்தன.  வானில் வட்டமடித்துப் பறந்து கொண்டிருந்த 5 விமானங்களும் மழை நின்றதும் தரை இறங்கின.

அதாவது சுமார்  15 நிமிடங்களிலிருந்து 30 நிமிடங்கள் வரை தாமதமாக ஒன்றன்பின் ஒன்றாகச் சென்னையில் தரை இறங்கின. சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய இலங்கை, மஸ்கட், மும்பை, புனே, கவுகாத்தி, மதுரை, ஐதராபாத் உள்ளிட்ட 10 விமானங்கள் 20 நிமிடங்களிலிருந்து 3 மணிநேரம் வரை தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.

சென்னை விமான நிலையத்தில் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.