பெலிட்வினி

சோமாலியாவில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 15 பேர் உயிரிழதுள்ளனர்.

ஆப்பிரிக்காவில் உள்ள  சோமாலியாவின் பெலிட்வினி நகர் அமைந்துள்ளது.  இந்நகரின் சோதனைச்சாவடி நோக்கி வாகனம் ஒன்று வெடிமருந்துகளை நிரப்பிக் கொண்டு சென்றது.

அந்த வாகனம் சோதனைச்சாவடி அருகே வந்தபோது பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இவ்வாறு நடந்த இந்த தற்கொலைப் படை தாக்குதலில் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி ரத்தவெள்ளத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.

இறந்தவர்களில் 5 பேர் காவல்துறையினர் ஆவர். இந்த சம்பவத்தில் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ராணுவத்தினரும் காவல்துறையினரும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.