புதுடெல்லி:
பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு இருந்தால் 15 நாள் விடுப்பு எடுத்துக்கொள்ள ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா தொற்று காலத்தில் அரசு, ஊழியர்களுக்கு பல வித நிவாரணங்களை அளித்து வருகிறது. அந்த வகையில் பணியாளர்கள், பொது குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் அளித்துள்ள ஒரு உத்தரவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய நிவாரணம் கிடைத்துள்ளது. மத்திர அரசு ஊழியர்களின் பெற்றோருக்கோ அல்லது அவரைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கோ கொரோனா தொற்றுநோய் ஏற்பட்டால், அந்த ஊழியர்கள் 15 நாட்களுக்கான சிறப்பு நேர்வு விடுப்பைப் பெற முடியும்.

“சிறப்பு விடுப்பு காலாவதியான 15 நாட்களுக்குப் பிறகும் குடும்ப உறுப்பினர்கள் / பெற்றோர்கள் எவரேனும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால், அவர்கள் மருத்துவமனையிலிருந்து வெளிவரும் வரை அரசு ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கான எஸ்சிஎல்-ஐத் தாண்டி எந்தவொரு வகையான விடுமுறையும் அனுமதிக்கப்படலாம்.” என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களைக் கருத்தில் கொண்டும், இது குறித்து பல வித சந்தேகங்களும் கேள்விகளும் வந்ததைத் தொடர்ந்தும், கொரோனா தொற்றுநோய்களின் போது சிகிச்சை, மருத்துவமனையில் அனுமதி, தனிமைப்படுத்தப்பட்ட காலம் குறித்த விரிவான உத்தரவை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ஒரு அரசு ஊழியர் கொரோனா தொற்றுக்கு நேர்மறையாக சோதிக்கப்பட்டு அவர் வீட்டு தனிமைப்பாடுத்தலில் இருக்கும்போது அவருக்கு 20 நாட்கள் வரை கம்யூட்டட் விடுப்பு வழங்கப்படும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஒரு அரசு ஊழியர் கொரோனா நேர்மறையாக பரிசோதிக்கப்பட்டு, வீட்டில் தனிமையில் இருந்தால் பின்னர் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டிருந்தால், அவருக்கு, தொற்று உறுதியான நாளிலிருந்து 20 நாட்கள் வரை ஒரு காலத்திற்கு பயண விடுப்பு / எஸ்சிஎல் / ஈட்டிய விடுப்பு வழங்கப்படும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“ஊழியருக்கு தொற்று உறுதியாகி 20 வது நாளுக்கு அப்பால் மருத்துவமனையில் இருந்தால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான ஆவண ஆதாரங்களை காண்பித்த பின்னர் அவருக்கு பயண விடுப்பு வழங்கப்படும்” என்று அனைத்து மத்திய அரசு அமைச்சகங்களுக்கும் வழங்கப்பட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.