டெல்லி:  இந்தியாவில் இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 8,822 பேருக்கு கொரோனா பாதிப்பு ஒரு நாள் கொரோனா பாதிப்பு 9,000ஐ நெருங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 15 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பரவல் ஏறி இறங்கி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8 மணியுடன் முடிந்த கடந்த  24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனா பாதிப்பு  நிலவரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, நேற்று புதிதாக மேலும்,  8,822 பேர் கொரோனவால் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,32,45,517 ஆக உயர்ந்தது.

நேற்று சிகிச்சை பலனின்றி மேலும் 15 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் நாட்டின்  உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,24,792 ஆக உயர்ந்தது.

கடந்த 24மணி நேரத்தில் 5,718 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,26,77,088ஆக உயர்ந்துள்ளது.  குணமடைந்தோர் விகிதம் 98.66% ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்குள்ளான  53,637 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.  சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.12% ஆக குறைந்துள்ளது.

இந்தியா முழுவதும் இதுவரை 1,95,50,87,271 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 13,58,607 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.