சென்னை: தமிழகத்தில் இன்றைய  கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, இன்று 7,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு  உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 9,62,935 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் இன்று மேலும் 2,558 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  8 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 4,176 பேர் கொரோனாவில் இருந்து  குணமடைந்துள்ளனர். இதுவரை 8,91,839 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று 29 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,999 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை விர  செங்கல்பட்டு 685 பேர், கோவை 534 பேர், திருவள்ளூர் 473 பேர், காஞ்சிபுரம் 203 பேர், தஞ்சையில் 166 பேருக்கு  கொரோனா தொற்று அதிகமாக  உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டம் வாரியாக இன்று பாதிக்கப்பட்டோர் விவரம்:

அரியலூர் 29

செங்கல்பட்டு 685

சென்னை 2,558

கோவை 534

கடலூர் 179

தர்மபுரி 83

திண்டுக்கல் 120

ஈரோட் 144

கல்லக்குரிச்சி 41

காஞ்சீபுரம் 203

கன்னியாகுமரி 96

கரூர் 53

கிருஷ்ணகிரி 162

மதுரை 234

நாகப்பட்டினம் 134

நமக்கல் 96

நீலகிரி 39

பெரம்பலூர் 11

புதுக்கோட்டை 62

ராமநாதபுரம் 46

ராணிப்பேட்டை 101

சேலம் 195

சிவகங்கை 59

தென்காசி 67

தஞ்சாவூர் 166

தேனி 56

திருப்பதூர் 63

திருவள்ளூர் 473

திருவண்ணாமலை 90

திருவாரூர் 125

தூத்துக்குடி 169

திருநெல்வேலி 171

திருப்பூர் 233

திருச்சி 241

வேலூர் 141

விழுப்புரம் 45

விருதுநகர் 79