டில்லி

மிக்ஜம் புயல் குறித்த எச்சரிக்கையை முன்னிட்டு நாடெங்கும் 144 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வங்கக்கடலின் தென்மேற்கில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறக்கூடும்.

’மிக்ஜம்’ எனப் பெரியடப்படுள்ள இந்த புயல் வரும் 4 ஆம் தேதி வட தமிழக கடலோர பகுதிக்கு நகர்ந்து 5ஆம் தேதி நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.

இதையொட்டி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் நாளை மிகக் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் மிக்ஜம் புயல் எச்சரிக்கை காரணமாக நாடு முழுவதும் 144 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதாவது நாளை முதல் 7 ஆம் தேதி வரை பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் 144 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.