வேலூர்:

இந்தியாவில், தமிழகம் உள்பட சில மாநிலங்களில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில், இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,256ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 220 பேர் பலியான நிலையில், 14,901 பேர் குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு உச்சம் அடைந்துள்ளது. அங்கு 18,693 பேர் பாதிக்கப்பட்டுஉள்ளது. அதைத் தொடர்ந்து, செங்கல்பட்டில் 1,537 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 1,124 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 52 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 38 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel