சென்னை:

கொரோனா பாதிப்பால் கவலைக்கிடமான நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்  திமுக மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து, மருத்துவமனைக்கு நேரில் சென்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டறிந்தார்.

முன்னதாக, தமிழக முதல்வரும் ஜெ. அன்பழகனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததோடு, தமிழக அரசின் உதவி தேவைப்பட்டால் வழங்க தயாராக இருப்பதாகவும்  தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அன்பழகனின் உடல்நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல் நிலை தொடா்ந்து கவலைக்கிடமாக இருந்து வந்த நிலையில், தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் இன்று காலை அறிவித்தது. அவருக்கு, செயற்கை சுவாசக் கருவிகள் (வெண்டிலேட்டா்) பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.