டெல்லி

நாட்டில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக டெல்லியில் 138 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தியா நடத்திய பயங்கரவாதிகள் மீதான அதிரடி நடவடிக்கையடுத்து, பாகிஸ்தான் அடாவடியாக இந்திய எல்லைக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்த முயற்சித்துவருகிறது. இந்த அத்துமீறலை இந்திய ராணுவம் தனது வான்பாதுகாப்பு அமைப்பு மூலம் வெற்றிகரமாக முறியடித்தது. இந்நிலையில் நேற்று 7 மணியளவில் தொடங்கிய பாகிஸ்தானின் அத்துமீறல் விடிய விடிய நடைபெற்றது.

இதை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது. எனவே நாடெங்கும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது/  அதன்படி நேற்று இந்தியாவில் 27 விமான நிலையங்கள் மூடப்பட்டன. வு மின் தடை ஏற்படுத்தப்பட்டது.

இன்று டெல்லியில் 138 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து டெல்லியில் தரையிறங்க இருந்த 4 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது . டெல்லியில் இருந்து புறப்பட இருந்த 5 சர்வதேச விமானங்களின் சேவை தற்காலிக நிறுத்தபட்டுள்ளது