டெல்லி:  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 15,823 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,  226 பேர் உயிரிழந்தும், , 22,844 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக மேலும், 15,823 பேர் கொரோனாவால்  பாதித்துள்ளனர்.  இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,40,015,743 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில்,  புதிதாக மேலும்  226 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதன்மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,51,189 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில்,  தொற்றில் இருந்து  மேலும்  22,844 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த  எண்ணிக்கை 3,33,42,901 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில், நாடு முழுவதும்  2,07,653  பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தியாவில் நேற்று  50,63,845 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 96,43,79,212 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.