அமிர்தசரஸ்: இத்தாலியில் இருந்து பஞ்சாப் வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த 125 விமான பயணி களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலக முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. அத்துடன் பிறழ்வு வைரசான ஒமிக்ரான் தொற்று பரவலும் தீவிரமடைந்துள்ளது. இந்தியாவிலும் தொற்று பரவல் தீவிரமாக பரவி வருவதால், விமான நிலையங் களில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்திய வரும் பயணிகள் அனைவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை நடத்தப்பட்டு, அதில் தொற்று பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அந்த நிலையில்,  இன்று இத்தாலியிலிருந்து அமிர்தசரஸ்  வந்த ஏர் இந்தியா விமானத்தில்  179 பயணிகள் பயணம் செய்தனர். அவர்களில்  125 பேருக்குகொரோனா தொற்று உறுதியாகிள்ளது அனைவரது மாதிரிகளும் தற்பொழுது ஒமிக்கிரான் மரபணு பரிசோதனைக்கும் அனுப்பப்பட்டுள்ளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.