ஹெராத்:
மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தது 12 பேர் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து ஹெராத் மாவட்ட ஆளுநர் முகமது சலே பர்டெல் தெரிவிக்கையில், மேற்கு மாகாணமானத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்ஹ்டில் குடியிருப்பு வீடுகளின் கூரைகள் இடிந்து விழுந்தது. இதில் 12 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் சிக்கி பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட பலர் காயமடைந்துள்ளனர்.