ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான அபுதாபி மீது நடந்த ட்ரோன் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் உட்பட மூன்று பேர் பலியானதாக கூறப்படுகிறது.

ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹௌதி தீவிரவாதிகள் மேற்கொண்ட இந்த தாக்குதலில் அபுதாபியில் உள்ள மூன்று பெட்ரோல் சேமிப்பு கிடங்குகள் எரிந்து சாம்பலானது.

அபுதாபி விமான நிலையத்திற்கு அருகில் நடைபெற்ற இந்த தாக்குதலில் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.