சென்னை:  தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  3,08,649 ஆக அதிகரித்துள்ளது.  அதிகபட்சமாக சென்னையில்,  நேற்று ஒரே நாளில் 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,11,054-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று மட்டுமே 1108 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 97,574 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 11,130 பேர் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுவரை கொரோனா சிகிசிச்சை பலனின்றி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,350 ஆகஅதிகரித்து உள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 11, 028 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

சென்னையில் 58.65% ஆண்களும் 41.35% பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேறறு(11.08.2020) மட்டும், 11,028 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

மண்டல வாரியாக குணமடைந்தவர்கள் விவரம்

1    திருவொற்றியூர்    3,519
2     மணலி        1,700
3     மாதவரம்        3,298
4     தண்டையார்பேட்டை    9,268
5     ராயபுரம்        10,971
6     திருவிக நகர்        7,827
7     அம்பத்தூர்        5,460
8     அண்ணா நகர்    11,232
9     தேனாம்பேட்டை    10,533
10     கோடம்பாக்கம்    11,294
11     வளசரவாக்கம்    5,506
12     ஆலந்தூர்        3,168
13     அடையாறு        7,053
14     பெருங்குடி        2,877
15     சோழிங்கநல்லூர்    2,356
16     இதர மாவட்டம்    1,512.

மண்டல வாரியாக  சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை

1   திருவொற்றியூர்    342
2     மணலி        117
3     மாதவரம்        432
4     தண்டையார்பேட்டை    636
5     ராயபுரம்        752
6     திருவிக நகர்        718
7     அம்பத்தூர்        1,717
8     அண்ணா நகர்    1,174
9     தேனாம்பேட்டை    684
10     கோடம்பாக்கம்    1,353
11     வளசரவாக்கம்    817
12     ஆலந்தூர்        550
13     அடையாறு        950
14     பெருங்குடி         440
15     சோழிங்கநல்லூர்    442
16     இதர மாவட்டம்    6 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.