மெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள வாட்டர்கிளியர் என்ற பகுதியில், வீட்டுக்குள் 11 அடி ராட்சத முதலை புகுந்தது. இதனால் அதிர்ச்சிஅடைந்த அந்த வீட்டை சேர்ந்த பெண் காவல்துறைக்கு தகவல் கொடுக்க, அவர்கள் வந்து  முதலையை பிடித்து சென்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு கிளியர்வாட்டர் எனும் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் ஜன்னலை 11 அடி நீளமுள்ள முதலை ஒன்று வீட்டுக்குள் புகுந்துள்ளது.

இதை யாரும் கவனிக்காத நிலையில், காலையில் விழித்த வீட்டின் உரிமையாளர் வீட்டுக்குள் ராட்சத முதலை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறிடியத்து ஓடினார். வீட்டினுள் புகுந்த முதலையானது அங்குள்ள பொருட்களை தனது வாலால் அடித்து நாசமாக்கிய நிலையில், அங்கிருந்த ஒயின் பாட்டிலையும் போட்டு உடைத்துள்ளது.

இதுகுறித்து அந்த பெண் காவல்துறைக்கு புகால் கொடுக்க, அவர்கள் வனத்துறையினர் உதவி யுடன் முதலை பிடித்து சென்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.