செங்கல்பட்டு:

மிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்திலும் தொற்று பரவல் தீவிரமாகி உள்ளது.  அங்கு இன்று ஒரே நாளில் மேலும் 114 பேர் நோய்த் தொற்றுக்கு ஆளாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 2,710பேர்  பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு 62,087ஆக அதிகரித்துள்ளது.  அதுபோல பலி எண்ணிக்கையும் 794ஆக உயர்ந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 3,872 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த னர். அவர்களில்  1,968 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1,850 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி புதிதாக மேலும்,  114 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டோர் மொத்த  எண்ணிக்கை 4,016 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா பாதித்த 53 பேர் உயிரிழந்துள்ளளனர்.

சென்னையைத் தொடர்ந்து, அண்டை மாவட்டமான செங்கல்பட்டிலும் கொரோனா பரவல் உச்சமடைந்து வருகிறது.