சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் மார்ச் 1 ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 12 நாட்களில் சுமார் 1 லட்சத்தை தாண்டிய மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக பள்ளி கல்வித்துறை பெருமிதத்துடன் தெரிவித்து உள்ளது.

அதிக பட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  10,946 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். குறைந்த பட்சமாக, நீலகிரி மாவட்டத்தில் 348 பேரும் சேர்ந்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வரும் மார்ச் 1-ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, மார்ச் 1ந்தேதி முதல் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் வழக்கமாக ஜூன் மாதத்தில் பள்ளி தொடங்கிய பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஜூன் மாதத்துக்கு முன்னதாகவே மாணவர் சேர்க்கை அரசு பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் மார்ச் 1-ஆம் தேதி முதல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறை இணைந்து தெரிவித்திருந்தன. மேலும்,  , அரசுப் பள்ளிகளில் அதிக மாணவர்களை சேர்க்க விழிப்புணர்வு பேரணிகள், துண்டு பிரசுரம் விநியோகம் போன்றவற்றை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.   மேலும் மாணவர் சேர்க்கை ஆகஸ்டு வரை நடைபெற வேண்டும் என கூறியுள்ளது.

இந்த நிலையில், மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் இதுவரை  (மார்ச் 12ந்தேதி ) சுமார் 1லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்தள்ளனர்.  மாணவர்கள்  சேர்க்கை தொடங்கிய 12 நாட்களில் 1 லட்சத்தை தாண்டி இருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசு, அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை, மதிய உணவுகள் உள்பட பல்வேறு சலுகைகளை வழங்கி வருவதால், அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதில் பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  இதனால்  அரசுப் பள்ளிகளில்  மாணவர்கள் குவிந்து வருகின்றனர்.

ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் கடந்த 8 நாட்களில் 80,076 மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறிய நிலையில், தற்போது,  கடந்த 12 நாளில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்து உள்ளது. அதிக பட்சமாக கள்ளக்குறிச்சியில் 10,946 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். குறைந்த பட்சமாக, நீலகிரி மாவட்டத்தில்348 பேரும் சேர்ந்துள்ளனர்.

இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை ஆகஸ்டு மாதம் வரை நடைபெற இருப்பதால், இதுவரை இல்லாத அளவுக்கு மாணவர் சேர்க்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.