சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல்  காரணமாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நவம்பர் 16ந்தேதி அன்று  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டார். அதைத்தொடர்ந்து வாக்காளர் சேர்ப்பு, திருத்தம் போன்றவைகள் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் பார்வையாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 10 பேரை  நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று வாக்காளர் பட்டியல் சார்ந்த புகார்களை பற்றி இவர்கள் ஆய்வு செய்வர் என்று தெரிவித்து உள்ளது. அதன்படி,

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அதுல் ஆனந்த் 

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு கிர்லோஷ்குமார் 

மதுரை, தேனி, விருதுநகர், மாவட்டங்களுக்கு சிஜிதாமஸ் வைத்யன் 

நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களுக்கு சண்முகம்,

நாமக்கல், கரூருக்கு சிவசண்முகராஜா

கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு ஜோதி நிர்மலாசாமி 

தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், தி.மலை மாவட்டங்களுக்கு மா.வள்ளலார் 

ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டைக்கு ஆபிரகாம்;

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு கருணாகரன்

அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கடலூர் மாவட்டங்களுக்கு சஜ்ஜன்சிங் ரா.சவன்