
பானிஹல், ஜம்மு காஷ்மீர்
அமர்நாத் யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததால் 10 பேர் மரணம் அடைந்துள்ளனர் என செய்திக் குறிப்பு ஒன்று தெரிவிக்கின்றது.
சில நாட்களுக்கு அமர்நாத் யாத்திரை மேற்கொண்ட யாத்திரிகள் மீது பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது தெரிந்ததே.
இன்று ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பானிஹல் அருகே ஒரு பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 10 பேர் மரணம் அடைந்துள்ளனர். 35 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்துக்கான காரணம் இன்னும் சரிவரத் தெரியவில்லை
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மேலும் விவரங்கள் ஏதும் இன்னும் அறிவிக்கப்படவில்லை
Patrikai.com official YouTube Channel