டெல்லி: 10 மற்றும் 12ம் வகுப்புகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு செப்டம்பரில் மறுதேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ்  செய்தியாளர்களிடம் பேசியதாவது: சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பில் பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு செப்டம்பரில் மறுதேர்வு நடத்தப்புடும். குறிப்பிட்ட பாடங்களில் எதிர்பார்த்த மதிப்பெண்களை காட்டிலும் குறைந்த மதிப்பெண், முன்னேற்றத் தேர்வுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கும் செப்டம்பர் மாதம் தேர்வு நடத்தப்படும்.

தேர்வுக்கான தேதி குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இந்த தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களே இறுதியானது. தேர்வு பற்றிய விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளியை தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம்.

மாணவர்கள் வரும் 22ம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் தகுதி, பாடத்திட்டங்களை கவனமாக  படித்து நிரப்ப வேண்டும் என்றும கூறியுள்ளார்.