சென்னை: தமிழகத்தில் நேற்று  கொரோனா வைரசால் 1,929 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில்  182 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் நேற்று 1,929 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதுடன், இதுவரை  கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,77,237 பேர் ஆக அதிகரித்துள்ளது.  அதேவேளையில்  கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,340 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் கொரோனாவிலிருந்து 1,886 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 25,22,470 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது கொரோனா வார்டில் 20,427 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் 182 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,39,856 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில்,  இதுவரை 8,340 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதுபோல நேற்று  174 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,29,522 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 1,994 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

09.08.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 33,60,920 பேருக்கும், 09.08.2021 அன்று 17,694 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மண்டலம் வாரியாக விவரம்: