டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும், 19,740 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன்,  23,070 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதே வேளையில் சிகிச்சை பலனின்றி 248 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை (8மணி வரையிலான நிலவரம்) வெளியிட்டுள்ள தகவலின்படி,  நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 19,740 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதனால்  மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,39,35,309ஆக உயர்ந்துள்ளது.

தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில்  மேலும், 248 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 450375 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 23,070 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 33248291 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 236643 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தியாவில் நேற்று ஒரு நாள் மட்டும் 79,12,202 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 93,99,15,323 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.