சென்னை

தமிழகத்தில் இன்று 147 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,51,469 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 40,648 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,48,37,145 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 147 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் ஆந்திராவில் இருந்து 2 பேர், அமீரகத்தில் இருந்து 2 பேர் வந்துள்ளனர்.    இதுவரை 34,51,469 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 2 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 38,021 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 387 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 34,11,545 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 1,902 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 47 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 7,50,564 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று ஒருவர் உயிர் இழந்துள்ளார்.  இதுவரை 9,068 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 98 பேர் குணம் அடைந்து மொத்தம் 7,40,950 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 549 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 17 உடன் இரண்டாம் இடத்திலும் செங்கல்பட்டு 12 உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

இன்றைய நிலவரப்படி அரியலூர், மயிலாடுதுறை, ஆகிய மாவட்டங்கள் கொரோனா இல்லாத மாவட்டங்களாக உள்ளன.