டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர்  மொத்த எண்ணிக்கை 1,04,32,526  ஆக உயர்ந்துள்ளது.  நேற்று ஒரே நாளில் புதியதாக 18,453 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ள நிலையில், இங்கிலாந்தில் இருந்து பரவியுள்ள புதிய வகையிலான உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பும் இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக, பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 18,453 பேருக்கு தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,04,32,526 ஆக உயர்நதுள்ளது.  தற்போதைய நிலையில்  2,21,447 பேர்  சிகிச்சையில்  உள்ளனர்.

அதுபோல கடந்த 24 மணி நேரத்தில்  229  பேர் பலியான நிலையில், இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 150,835 ஆக அதிகரித்துள்ளது.  நேற்று ஒரே நாளில்  நோய் தொற்று பாதிப்பில் இருந்து விடுபட்டோர் எண்ணிக்கை 19,242 பேர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,00,55, 935 ஆக உயர்நதுள்ளது.