சென்னை: தமிழகத்தில் இன்று புதியதாக 761 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதே வேளையில் இன்று மட்டும் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள்  உள்ளது.  இன்று மட்டும் புதியதாக 761 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 8,25,537  ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இவர்களில் 5 பேர் தனியார் மருத்துவமனையிலும், 2 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.

இன்று ஒரே நாளில் 882 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் இன்று 218 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.