டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக11,451 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதுடன், 266 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம்  இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர்,  இறப்பு விகித நிலவரம் குறித்த அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதன்படி நாடு முழுவதும் புதிதாக 11,451 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,43,66,987 ஆக உயர்ந்தது.

நேற்று மட்டும் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 266 பேர் இறந்துள்ளனர்.  இதன்மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,61,057 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.34% ஆக உள்ளது.

அதேவேளையில் கடந்த 24மணி நேரத்தில்  தொற்றில் இருந்து ஒரே நாளில் 13,204 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 3,37,63,104 ஆக உயர்ந்துள்ளது. கொரோனவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.24% ஆக உள்ளது.

தற்போது நாடு முழுவதும் 1,42,826  பேருக்கு கொரோனா தொற்றுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தியாவில்  நேற்று 23,84,096 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதுவரை 1,08,47,23,042 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.