டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 5,379 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதுடன்,  27 பேர்  உயிரிழந்துள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8மணி வரையிலான கொரோனா பாதிப்பு தகவல்களை வெளியிட்டு உள்ளது. அதன்படி, நேற்று புதிதாக மேலும் 5,379 பேர் கொரோனா தொற்றால் பாதித்துள்ளனர். நேற்று முன்தினம் 5ஆயிரத்துக்கு கீழே பாதிப்பு குறைந்திருந்த நிலையில், நேற்று சற்று உயர்ந்துள்ளது.  இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,44,72,241 ஆக குறைந்தது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 55,379 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி பாதிப்பு விகிதம் 1.67% ஆக உள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.11% ஆக குறைந்துள்ளது.

தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில்  27 பேர் கடந்த 24மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,28,057 ஆக உயர்ந்தது.

கடந்த 24மணி நேரத்தில் 7,094 பேர் குணமடைந்தனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,38,93,590 -ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை  2,13,91,49,934 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 18,81,319 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.