டெல்லி:  இந்தியாவில்  கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 1,033 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதுடன், தொற்று பாதிப்புக்கு 43 பேர் பலியாகி உள்ளனர். 1,222 பேர் குணமடைந்துள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் 1,033 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.  இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,31,958 ஆக உயர்ந்தது.

நேற்று சிகிச்சை பலனின்றி மேலும் 43 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,21,530 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது

கடந்த 24மணி நேரத்தில் 1,222 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,24,98,789 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.76% ஆக உயர்ந்துள்ளது..

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 11,639 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.03% ஆக குறைந்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை  1,85,20,72,469 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 15,37,314 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.