சென்னை: தமிழகத்தில்  நேற்று புதிதாக 1,592 பேர் கொரோனாவால்பாதிப்படைந்துள்ளனர். இவர்களில் ‘ 165 பேர் சென்னையில்  பாதிப்படைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 26,22,678 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில், கொரோனாவிலிருந்து  குணமடைந்தோர் மொத்த 25,71,378  ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சிகிச்சை பலனின்றி  கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,018 ஆக அதிகரித்துள்ளதாகவும், தற்போதைய நிலையில்,  16,282 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனாப பாதிப்பில் கோவை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் 165 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதன் காரணமாக  சென்னையின் மொத்த பாதிப்பு  5,44,983 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒருவர் மட்டுமே கொரோனாவுக்கு பலியான நிலையில் இதுவரை 8,410 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று தொற்று பாதிப்பில் இருந்து 148 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,34,828 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 1,745 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

05.09.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 42,45,359 தடுப்பூசி போடப்பட்டுள்ளது மற்றும் 05.09.2021 அன்று 40,234 ஷாட்கள் வழங்கப்பட்டுள்ளன.