சென்னை:

மிழக தலைநகர் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,146 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,993 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிகக்கப்பட்ட வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,146 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள தால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 20,993 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 197  ஆக உயர்ந்துள்ளது. அதுபோல கொரோனாவில் இருந்து இதுவரை 10,572 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 10,223 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டம் வாரியாக விவரம்:

சென்னை – 1146, அரியலுர் -2, செங்கல்பட்டு – 95, கடலூர் -1, தருமபுரி -1, திண்டுக்கல் -5, கள்ளக்குறிச்சி -1, காஞ்சிபுரம் -16,  கன்னியாகுமரி-5, கரூர் -4,  கிருஷ்ணகிரி -5,  மதுரை -7,  நாகை-6, புதுக்கோட்டை 1, ராமநாதபுரம்-4, ராணிப்பேட்டை -2, சேலம் -2, சிவகங்கை -2, தென்காசி-2, தஞ்சாவூர் -2,திருவள்ளூர் – 79, திருவண்ணாமலை -3, திருவாரூர் -4, தூத்துக்குடி -14, திருநெல்வேலி -2, வேலூர் -2, விழுப்பரம் -6, விருதுநகர் -4, மொத்தம் 1423