டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 12,729 பேருக்கு கொரோனா பாதிப்பு, 12,165 பேர் குணமடைந்து உள்ளதுடன் 221 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்தி சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரை உள்ள கடந்த 24 மணி நேரத்திற்கான கொரோனா தொற்று குறித்த தகவலை வெளியிட்டு உள்ளது. அதன்படி, கடந்த 24மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள்  12,729 பேர் . இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,43,33,754 ஆக உயர்ந்தது.

நேற்று மேலும் 221பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந் தோர் எண்ணிக்கை 4,59,873 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.34% ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 12,165பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம்  குணமடைந்தோர் எண்ணிக்கை 3கோடியே 37,24,959ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.23% ஆக உள்ளது.

தற்போது 1,48,922பேருக்கு கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தியாவில் நேற்று 5,65,276டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதுவரை 107 கோடியே 70 லட்சத்து 46,116டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.