சென்னை: தமிழகம் முழுவதும் 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 106 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகஅரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று பெரம்பலூர், ராமநாதபுரம், மயிலாடுதுறையில் புதிதாக ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை. மொத்த கொரோனா பாதிப்பு 27,07,368 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை  36,204 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், தொற்று பாதிப்பில் இருந்து 26,60,419 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும்  10,745 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இன்று ஒரே நாளில் 106 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 5,55,181 பேர் பாதிக்கப்பட்டு  உள்ளனர்.

இன்று 3 பேர் மட்டுமே பலியான நிலையில், இதுவரை 8561 பேர் உயிரிழந்துள்ளனர்.  இன்று 132  பேர் குணமடைந்துள்ளதுடன், இதுவரை 5,45,355 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தற்போது சென்னையில் 1265 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு:

அரியலூர் 2
செங்கல்பட்டு 80
சென்னை 106
கோவை 102
கடலூர் 15
தர்மபுரி 14
திண்டுக்கல் 4
ஈரோடு 68
கள்ளக்குறிச்சி 7
காஞ்சிபுரம் 27
கன்னியாகுமரி 19
கரூர் 20
கிருஷ்ணகிரி 12
மதுரை 11
மயிலாடுதுறை 0
நாகப்பட்டினம் 10
நாமக்கல் 41
நீலகிரி 19
பெரம்பலூர் 0
புதுக்கோட்டை 1
ராமநாதபுரம் 0
ராணிப்பேட்டை 1
சேலம் 56
சிவகங்கை 8
தென்காசி 5
தஞ்சாவூர் 33
தேனி 2
திருப்பத்தூர் 4
திருவள்ளூர் 32
திருவண்ணாமலை 12
திருவாரூர் 19
தூத்துக்குடி 9
திருநெல்வேலி 10
திருப்பூர் 62
திருச்சி 29
வேலூர் 15
விழுப்புரம் 11
விருதுநகர் 9